அரபொலகந்த 29 தனிவீடுகள் மக்களின் பாவணைக்கு

லைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதிஒதுக்கிட்டில் மூலம் களுத்துறை மாவட்டத்தின் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள் மக்களின் பாவணைக்கு 01-07-2018 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டன. மேலும்; 10 இலட்சம் பெறுமதியான கொங்கிரிட் பாதையும், பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தினை அதிகரிப்பதற்கான 'டிகிரி சக்தி' போசணை பிஸ்கட் வழங்கும் திட்டமும் புதிய முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் தோட்டபுற சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள 2-5 வயதுகுட்பட்ட சிறார்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இவ்நிகழ்வில் சுகாதார, போசணை மற்றும் சுதேஷ அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட வித்தான, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -