இலஞ்ச ஆணைக்குழுவினரால் குடியேற்ற உத்தியோகத்தர் கைது


அப்துல்சலாம் யாசீம்-
ன்தளாய் உதவி காணி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் குடியேற்ற உத்தியோகத்தரொருவரை (ஜனபத இடம் நிலதாரி) இன்று (19) செவ்வாய்கிழமை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அக்போபுர 87ம் கட்டை பகுதியிலுள்ள காணியொன்றுக்கு காணி உரிமம் பெற்று தருவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த குடியேற்ற உத்தியோகத்தர் மெதிரிகிரிய பகுதியைச்சேர்ந்த ஆர்.எம்.காமினி ரத்னாயக்க (ஜம்பத்தேழு வயது) எனவும் தெரியவருகின்றது.

வயோதிபரிடம் காணி உரிமம் வழங்குவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டிருந்த நிலையில் அவரது உறவினரொருவரினால் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து அவர்கள் இவரை இன்றைய தினம் கைது செய்ததாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -