நாவலப்பிட்டில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டதில் ஒருவர் பலி


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
நாலப்பிடிய கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

நாலப்பிட்டி பல்லேகல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜயசேகர முதியன்சலாகே அமில என்ற இளைஞனே இவ்வாறு பலியனார்

அட்டனிலிருந்து கண்டி நோக்கிச்சென்ற தனியார் பஸ்ஸுடன் நாலப்பிட்டி பல்லேகல பகுதியிலிருந்து நாலப்பிட்டி நோக்கி வந்த மோட்டார் சைக்கிலுமே 06.06.2018 காலை 8.45 மணியளவில் நாவலப்பிட்டிய கொந்தென்னாவ ரயில் கடவைக்கருகில் விபத்துக்குள்ளானது

முந்திச்செல்ல பெருத்தமற்ற இடத்தில் லொறியொன்றை மோட்டார் சைக்கில் ஓட்டுனர் முந்திச்செல்ல முற்பட்ட போதே வலுக்கிச்சென்று எதிரே வந்த பஸ்ஸுல் மோதுண்டுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் சடலம் நாவலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -