மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.
நாட்டின் கண்டி, தெல்தெனிய, பல்லேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் நேற்று பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.