சீருடை அறிமுக சினேக பூர்வ கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் அணியினர் வெற்றி



கல்முனை-, எம்.என்.எம்.அப்ராஸ்-

 கல்முனை இஸ்லாமாபாத் அணியின் சீருடை அறிமுக சினேக பூர்வ கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று கல்முனை சந்தாங்கேனி விளையாட்டு மைதானத்தில் (23) இடம்பெற்றது. கல்முனை இஸ்லாமாபாத் அணியின் தலைவர் எச்.எம் .பஸ்மீர் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை டொப் ரேங்க் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் அணி விளையாட்டுக்கழகத்திக்கிடையில் இவ் போட்டி இடம்பெற்றது. 

மட்டுப்படுத்தப்பட்ட 18 ஓவரிகளில் முதலில் துடுப்படுத்தாடிய கல்முனை டொப் ரேங்க் அணியினர் 129 ஓட் டங்களை பெற்றனர் பதிலுக்கு துடப்படுத்தாடிய கல்முனை இஸ்லாமாபாத் அணியினர் சிறந்த துடப்பாட்டம் மூலம் 17 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து தனது இலக்கை அடைந்து வெற்றி கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டனர்.

இவ் நிகழ்விக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினறும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞ்ர் அமைப்பாளர் கெளரவ சடடத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் கெளரவ அதிதியாக மெளலானா ட்ரவல்இன் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜானுஸ் அவர்களும் மற்றும் விசேட அதிதியாக இஸ்லாமாபாத் அன்வர் ஸ்டோர் உரிமையாளர் ஐ.எல்.ஏ.அன்வர் அவர்களும் மற்றும் அதிதிகள் விளையாட்டு ரசிகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -