மலையக ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு



க.கிஷாந்தன்-

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 23.02.2018 அன்று மாலை 4.30 மணியளவில் தடம்புரண்ட புகையிரதம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது. எனினும் இதுவரை வழமைக்கு திரும்பவில்லை. பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்படுவதாக நானுஓயா புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் புகையிரத சேவையை பகல் நேர அளவில் முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -