மரங்களை வெட்ட கோரி கோரிக்கை



தலவாக்கலை பி.கேதீஸ்-
ட்டகொடை சமன்புற கொலனி பகுதியில் குடியிருப்பு ஒன்றிணை அண்மித்து காணப்படும் கருப்பந்தேயிலை மரங்களை வெட்டி அகற்றுமாறு அதனை அண்மித்து வாழும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் காலநிலை சீர்கேடு ஏற்படும் பட்சத்தில் இம்மரக்கிளைகள் முறிந்து குடியிருப்பின் மீது விழும் அபாயம் நிலவுகிறது.

 மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்து குடியிருப்புகளின் மீது விழும் அபாய நிலையும் தோன்றியுள்ளது. இது தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவித்தும் இதுவரை மரங்களை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அதனை அண்மித்து வாழும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இம்மரங்கள் சூழவுள்ள பகுதியின் குடியிருப்புகளில் முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் வாழ்ந்து வருவதனால் கடும் காற்று வீசும்போது மிக அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் எனவே தங்களின் நலன் கருதி உடனடியாக இம்மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -