திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான சண்டையில் ஐவரை அடுத்தமாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(27) உத்தரவிட்டார்.
திருகோணமலை,கந்தளாய் நகர் பகுதியைச் சேர்ந்த 20,21,மற்றும் 22,வயதுடைய ஐவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இரண்டு குழுக்களாக திருகோணமலை பிரதேசத்தில் செயற்பட்டு வந்துள்ளதோடு,காதல் பிரச்சினைகள் தான் சண்டைக்கு காரமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு குழுவில் உள்ள ஓருவரை மூவர் தாக்கியுள்ளனர் பின்பு தாக்கப்பட்டவர் குழுவை அழைத்துக்கொண்டுமற்ற குழுவை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தொடர்பாக திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய ஐவரை நேற்று(26) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.