நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும்



ழலும், இனப்பிரச்சினையும் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு நெருக்கடிகளாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின்போதும் மக்கள் எதிர்பார்த்த அபிலாஷைகளை நிறைவேற்றாமைக்கு இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை சிறந்த முறையில் தெளிபடுத்திக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும். எனினும் கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.
அதனால் சில தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை மூடி மறைத்து பொய் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -