கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை


கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இடையில் சரக்கு மற்றும் பயணிகளுக்கான கப்பல் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் Ceylon Shipping Corporation Ltd சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணக்கப்பாட்டு குழு இதற்கான கேள்வி மனுவை கோரியுள்ளது.
இலங்கைக்கான தேசிய கடல் பயணங்களுக்கான நிறுவனமாக Ceylon Shipping Corporation Ltd நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் இந்த கப்பல் சேவையை கொண்டு நடாத்தவுள்ளது.
இந்த கப்பல் சேவை ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு உட்பட்டதாக இருக்கும் பின்னர் இது நீடிக்கப்படும்.
2011 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அடிப்படையில் இந்த சேவையை கொண்ட நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையை முன்னெடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களது கேள்வி மனுக்கள்( Expression of Interest (EOI) அடிப்படையில் தெரிவுகள் இடம் பெறும்.

இதற்கான கேள்வி மனுக்களை மார்ச் மாதம் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னாதாக கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று அமைச்சரவையின் இணக்கப்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

The Chairman

Cabinet Appointed Negotiating Committee

Ministry of Ports and Shipping

No. 19 , Chaithya Road,

Colombo – 01

Sri Lanka
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -