33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் விபத்து




மு.இராமச்சந்திரன்-

கொட்டகலை எரிபொருள் கலஞ்சியசாலைக்கு பெற்றோல் கொண்வந்த பவுசர் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியிலே 06.12.2017 அதிகாலை புவுசரின் பின் சில்லு திடீரென கழன்று பாதையோர பாதுகாப்பு மேடையில் மோதுண்டு விபத்துக்குள்ளானது

முத்துராஜவெலயிலிருந்து 33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுடர் விபத்துக்குள்ளானமையினால் போக்குவரத்து ஒருவழி பாதையில் இடம்பெறுவதுடன் சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பிரிதொரு பவுசரினூடாக எரிபொருளை கொட்டகலை எரிபொருள் களஞ்சிய சாலைக்கு கொண்டு செல்ல பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -