மாற்றம் இன்று எல்லாவற்றிலும் தேவையாகவே உள்ளது

எம்.எம்.ஏ.ஸமட்-

மாற்றம் இன்று எல்லாவற்றிலும் தேவையாகவே உள்ளது. நமது நடத்தைகள், மனப்பாங்குகள், வாழ்க்கை முறைகள் என அத்தனை விடயங்களிலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்படுத்தப்படுவதும் ஏற்படுவதும் ஒரு ருசிகரமானதாகவே அமையும். மாற்றமில்லாத வாழ்க்கை மலர்ச்சியில்லாமலே போய்விடும். வாழ்க்கையை இன்பகரமானதாக மாற்ற வேண்டுமானால் நாம் மாற்றங்களுக்காக மாற வேண்டும். நாமும் நமது சூழலும் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும். அந்த மாற்றங்கள் இஸ்லாமிய வழி தவறக் கூடாது.

அந்நகருதலுக்கான நாளாக ஒவ்வொரு சமூகத்தினரும் தத்ததமது புது வருடப் பிறப்புக்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு நாள் அவர்களின் புதுவருட தொடக்க நாளகா அமைகிறது. அந்தவகையில,; உலகில் வாழும் ஏறக்குறைய 160 கோடி இஸ்லாமியர்களின் புதுவருடமான ஹிஜிரி 1439ஆம் வருடம் மலர்ந்துள்ளது.

நாட்களின் சூழற்சியால் மாதங்கள் தோன்றுகின்றன. மாதங்கள் சுழன்று வருடங்கள் மலர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 12 மாதங்களைக் கொண்டவை. இதில் சகல மதத்தினரும் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பரந்து விரிந்த பூமியில் வாழும் வௌ;வேறுபட்ட நாட்டினர், மதத்தினர், இனத்தினர் கால நேரத்தைக் கணக்கிடுவதற்கு வௌ;வேறு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். சிலர் சூரியனையும் சிலர் சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டு வருகின்றனர்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் சந்திரனின் சுழற்சியைக் கொண்டே இஸ்லாமிய மாதத்தைக் கணக்கிட்டு வருகின்றனர். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கா நகரை விட்டு மதினா நகருக்கு (ஹிஜ்ரத்) சென்ற வராலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் இஸ்லாமிய வருடக் கணக்கு கணிப்பிடப்படுகிறது. இது ஹிஜ்ரி வருடம் என அழைக்கப்படுகிறது.

ஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரமாகும். இஸ்லாமிய ஹிஜ்ரி 1439 புது வருடத்திறகான முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக்குழுவின் மகாநாடு கடந்த வியாழக்கிழமை கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி முஹர்ரம் தலைப்பிறை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கேற்ப ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய புது வருடம் தொடங்கியுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தோடும் இஸ்லாமியரோடும் சம்பந்தப்பட்ட அநேக விடயங்கள் பிறைக் கணக்கெடுப்பை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோன்பு, ஹஜ் வணக்கங்களின் ஆரம்பம், பெருநாள் தின நிர்ணையிப்பு. ஸக்காத் ஏழை வரி கொடுப்பதற்கான காலம், கணவன் இறந்த அல்லது பிரிந்ததற்காக மனைவி அனுஷ்டிக்க வேண்டிய 'இத்தா'வுக்குரிய நாட்கள், திருமணத்திற்கான நாட்கள் போன்ற பலவற்றுக்கு பிறைக்கணக்கெடுப்பானது முக்கியம் பெறுகிறது. இதில் இலங்கை வாழ் சர்வதேச பிறையாளர்கள் நோன்பை அடைவதிலும், பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் முரண்பட்டுக்கொள்வதையும் வருடாவருடம் காண்கின்றோம்.

பிறையின் முக்கியத்துவம் தொடர்பாக புனித குர்ஆனின் ஸூறா பகராவில் கீழ்வருமாறு தெளிவுபடுத்தப்படுகிறது. ' (நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் (அதற்கு) அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு(வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை' எனக் கூறுவீராக.

மேலும், 'வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் (இருந்து மறுமை நாள் வரை நடந்தேறும் அனைத்து விஷங்களும் எழுதப்பட்ட) அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும்' என அல்குர்ஆனின் ஸூறா தௌபாவில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். அப்புனித மிக்க நான்கு மாதங்கள் துல்கஃதா, ரஜப், துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவை என நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள் ;(ஆதாரம்: புஹாரி, அஹ்மத்)

இம்மாதங்களில் போர் புரிவது விலக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள போரிடலாம் என்பதை இஸ்லாம் கற்றுத் தருவதையும் நாம் அறிவோம். இதன் மூலம் மனித சமூதாயத்தில் சண்டை சச்சரவு இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவது இம்மாதத்தில் முஸ்லிம்களின் கடமையாகிறது.

இது அல்லாஹ் தனது திருமறை மூலம் நமக்கிடும கட்டளையாகும். இக்கட்டளையைச் சரி வர நிறைவேற்றும்போது சமூகத்திற்கிடையே மட்டுமல்ல நாட்டிலும் முழு உலகிலும் முஸ்லிம்களால் அமைதியை ஏற்படுத்த முடியும்.

முஸ்லிம்களும்; சம காலமும்

இன்று முஸ்லிம் நாடுகள் பலவற்றில்; யுத்தம் நடக்கின்து, முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம் முஸ்லிம்களை நோக்கி துயரம் துரத்திக்கொண்டிருக்கிறது. திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக,; மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மியன்மார் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற இனச்சுத்திகரிப்பைக் குறிப்பிடலாம்.

மியன்மார் அரசின் இனச்சுத்திகரிப்பினால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுமோசமாக ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இனச்சுத்திகரிப்புக்குள்ளான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகளாக அண்றை நாடாடுகளில் தஞ்சமடைந்துள்ளர். இதில் பங்களாதேஷில் மட்டும் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்; அகதிகளாக தஞ்யமடைந்து சொல்லொன்னா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனிதாபிமானமுள்ளோர் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள.;

இந்நிலையில,; இந்நாட்டில் வாழும் இனவாதிகள் மியன்மாருக்கான ஆதரவு ஆர்பாட்டங்களை மேற்கொள்வதோடு இலங்கைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் வருகை தருவதாகவும் பொய்ப்பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வரும் நிலையில், இனவாதிகளின் இப்பொய் பிரச்சாரங்களை அரசு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அழிவுகளும், அவலங்களும் நிறைந்து வழியும் நாடுகளாக முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்கள் வாழும் பிராந்தியங்களும் உலகளவில் காணப்படுகின்றன. இறைகட்டளையின் பிரகாரமும் நபி வழியிலும் வாழ்ந்து அமைதி, பொறுமை விட்டுக் கொடுப்பு என்பவற்றின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய உலக முஸ்லிம்கள்; ஆட்சி அதிகாரங்களுக்காகவும், கொள்கை கோட்பாடுகளுக்காவும், இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலும் பிரிந்து நின்று இந்த புனித மாதங்களிலும் தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொள்வதானது உலக முஸ்லிம்களின் பலத்தை இழக்கச் செய்துள்ளது.

முஸ்லிகளின் எதிரிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அழித்தொழிக்கும் செற்பாட்டில் இறங்கி அவர்களின் இலக்கை நோக்கி உலகளாவிய ரீதியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதனை உணராத இஸ்லாமியர்கள் கொள்கைப்பற்றைப் பிரதானப்படுத்தி தங்களுக்குள் தாங்களாக எதிரிகாளாக மாறி இரத்தத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரபுலக அவலத்தின் பின்னணி இதுவாகவே காணப்படுகிறது. தவறுகளை நாமே புரிந்து கொண்டு அதன் விளைவுகளையும் நாமே எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் காலத்திற்குள் உலகளாவிய முஸ்லிமகள்; தள்ளப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த ஆட்சியில் இலங்கையிலும் அத்தகையதொரு நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதை எவரும் அறியாமலில்லை. அரசியல் ரீதியிலும் வேறு வழியிலும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே பகைமையை உருவாக்கி, ஒற்றுமையைச் சீர்குலைத்து அதன் ஊடாக இஸ்லாத்தைக் கேவலப்படுத்தவும், முஸ்லிம்கள் தங்களுக் தங்களை எதிரிகளாக நோக்கவும் மறைமுகமான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவை எதிர்பார்த்த பிரதிபலங்களை அடையாத நிலையில், நேரடியாக முஸ்லிம்களின் மார்க்க விடயங்களைக் கேவலப்படுத்தும், கொச்சைப்படுத்தும்; கைங்கரியங்களிலும் முஸ்லிம்களின் எதிரிகள் செயற்பட்டதையும் நாம் அறிவோம். அவ்வாறானதொரு நிலை இந்த நல்லாட்சியின் இரு வருட காலத்திலும் நடந்தேறியுள்ளன. கடந்த தியாகத்திருநாளில் திட்டமிட்டு முஸ்லிம்களின் உணர்வுகளதை; தூண்டும் வகையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் இறக்காமம் மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்தில் முஸ்லிம் தனியாருக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டமை இந்த நல்லாட்சியிலும் இனவாதத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இடம்பெறுகிறது என்பதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

இந்hட்டில் வாழும் முஸ்லிம்களை எவ்வாறேனும் வன்முறைகளுக்கு இட்டுச் சென்று பேரழிவை ஏற்படுத்துவதற்கு இனவாதம் காலத்திற்குக் காலம்;, சந்தர்ப்பத்திற்கு சந்தர்பம் தமது கைங்கரியங்களை பல்வேறு கோணங்களில் முன்னெடுப்பதை காண முடிந்த போதிலும், அவர்களின் வழியில் விடையளிப்பதற்கு நாம் முயற்சிப்போமானால் அவை நமக்கே சேதத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.

நமது செயற்பாடுகளில் தவறுகள் எழுகின்றபோது அதனால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் நமது செயற்பாடுகள் இறைவனுக்கு பொறுத்தமானதாகவும் நபி வழியிலும் அமையும்போதூன் நாம் கௌரவப்படுத்தப்பட்ட சமூகமாக வாழ வழி பிறக்கும். ஆனால், நமது செயற்பாடுகள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறாக முன்னெடுக்கப்படுவதனால் பல வழிகளிலும் அழிவுகளையும், நெருக்கடிகளையும், சோதனைகளையும,; பிளவுகளையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டும் தேவையும் உள்ளது.

புதுவருடமும் மாற்றமும்
இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம்கள் இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1439ஆம் வருடத்தில் காலடிவைத்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் நமது மார்க்கத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற சுய விசாரணையை ஒவ்வொரு வரும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மார்க்கத்தில் நாம் இருக்கும் நிலையை அறிந்துகொள்ள முடியுமாக அமையும். நமது சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த, நம்மை நாம் நல்வழிப்படுத்திக் கொள்ள சுயவிசாரணைகள் துணைபுரிகின்றன.

இஸ்லாம் காட்டித்தரும் வழிகளிலிருந்து விலகி நடக்கின்றபோது, செயற்பாடுகள் மார்க்கத்திற்கு முரணாக அமைகின்றபோது அதனால் மலினப்படுத்தப்படுவது நாம் மாத்திரமல்ல சமூகமும், மார்க்கமும்தான்; என்ற சிந்தனை நம்மில் உருவாக வேண்டியுள்ளது. அந்த சிந்தனைக்கான மாற்றம் இந்த இஸ்லாமிய புதுவருடத்தில் உருவாகுவது நம்மை இழிவிலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்நிலையில், முஸ்லிம்களில்; சிலர் இஸ்லாமி புதுவருடம் எப்போது பிறக்கிறது என்று கூடத் தெரியாதவர்களாகவும,; இஸ்லாமிய வருடத்தின் 12 மாதங்களையும் ஒழுக்குமுறையாக சொல்லாத் தெரியாதவர்களாகவும,; எந்த மாதத்தின் பின்னர் எந்த மாதம் உள்ளது என்பதைக் கூட அறியாதவர்களாவும் நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு உலா வருவது கவலையளிக்கும் விடயமாகும்.

மேற்குலகின் நவீன வாழ்க்கை முறைக்கும் உடை, நடை, பாவனைக்கும், ஆங்கில மொழி மோகத்திற்கும்; அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருப்பதனால், நமக்கான தனித்துவங்களை நம்மால் பேண, அவற்றை அழகுபடுத்த, அந்தனித்துவ வாழ்க்கை முறைக்குள் முழுவதுமாக நுழைந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழலுக்குள் சமூகத்தில் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் நமக்கான புதுவருடமும் நமது தனித்துவமும் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட விடமாக மாறிவிட்டது என்பதையிட்டு வேதனைப்பட வேண்டியுள்ளது.

இறை கட்டளையையும், நபி வழியையும் பின்பற்றி அதன்பிரகாரம் நமது அத்தனை விடயங்களையும் நிறைவேற்றி வாழ வேண்டிய நாம், நம்மை நாமே நமது செயற்பாடுகளினால் கேவலப்படுத்திக்கொண்டு பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் விடுகின்ற தவறுகளே நம்மை ஏனைய சமூகத்தின் மத்தியில் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆண்மீகக் கொள்கைகளை வளர்ப்பதற்காகவும், அரசியல் கட்சிகளை வளர்த்தெடுப்பதற்காகவும் உழைக்கும் நாம், நமது இளைஞர் சமூகமும், வளரும் சிறுவர்களும் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவறான பாதைகள்; சமூகத்தை எங்கே கொண்டு சேர்க்கும். எத்தகைய வினைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று சிந்தித்து செயற்படுவதற்கு நம்மில் பலர் தயாரில்லை. அவ்வாறு செயற்பட்டாலும் அவை தொடராக இடம்பெறுவதில்லை. இதுதான்; சமூகத்தின் இன்றைய நிலை என்று கூறுவதில் தவறேதும் இருக்காது.

இஸ்லாம்; எத்தகைய ஆடைகளை அணிவதற்கு அனுமதித்திருக்கிறதோ அந்த இஸ்லாமிய ஆடைகளைத்தான் அணிகிறோம் என்ற போர்வையில் ஆடையினால் ஆபாசம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு பெற்றோர்களும், கணவர்களும் உடந்தையாகிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வகை ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடுத்தும், வெறுத்தும் இருக்கிறதோ அந்த ஆடைகளை விரும்பி அணியும் சமூகமாக இன்றைய பல இஸ்லாமிய இளைஞர்களும், யுவதிகளும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால், முஸ்லிம் பெண்களுக்குரிய ஆடை எது என வினவும் பிற சகோர சமூக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. பிறந்துள்ள இந்த ஹிஜ்ரி 1439ஆம் வருடத்திலாவது முஸ்லிம்களின் ஆடை விடயத்தில் மாற்றம் காணப்படுவது அவசியம் என்ற கருத்தை முன்வைப்பது அவசியமாகவுள்ளது

அந்தவையில், உதயமாகவுள்ள இஸ்லாமிய புதுவருடத்;தில் புதிய சிந்தனைகளினூடான மாற்றங்கள் இஸ்லாமிய வரையறகைளை மீறாத வகையில் சமூகத்திலும் தனி வாழ்விலும் ஏற்பட வேண்டும். அதற்கான பயணங்கள் தொடங்கப்பட வேண்டும். நமது ஒவ்வொரு விடயத்திலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று தனித்துவம் பேணப்பட வேண்டும். அதன் மூலம் நாம் நம்மைப் கௌரவப்படுத்தியவர்களாக மலினப்படுத்தப்படாமல் சகோதர சமூகங்களோடு வாழ முடியும்.

மாறாக, அரசியல் என்றும் ஆண்மீகக் கொள்கைள் என்றும் வியாபாரம் என்றும் பதவி, பட்டங்கள் என்றும் ஊர்; என்றும் பிரதேசம் என்றும் நமக்குள் நாம் போட்டி போட்டு ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வாழ்வதனால் நம்மால் எதையும் சாதித்துவிட முடியாது. அவை நம்மை, நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தும். அவமானத்திற்குள்ளும் அவமதிப்புக்குள்ளும் தள்ளிவிடும். ஆத்தோடு எதிரிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளும் சிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

சொற்ப நலன்களுக்காக தனித்துவத்தை தாரைவார்த்து ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கின்றபோது அதனால் பாதிக்கப்படுவது சமகால முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல எதிர்கால நமது சந்ததியினரும்தான் என்ற சிந்தனை - சிந்திக்காமல் செயற்படுகின்றவர்களில் ஏற்படும்போதுதான் சமூகம் மாற்றத்தைக் காண முடியும்.

நமது கனவுகளும், ஆசைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக எதைவிற்றாவது அவற்றை அடையவேண்டும் என்ற சிந்தனை நம்மிலிருந்து மாற வேண்டியுள்ளது. அவற்றுக்காக உழைப்பது தவறல்ல. ஆனால், அவை சமூகத்தைக் காட்டிக்கொடுக்காது, தனித்துவத்தை இழக்காது, உரிமைகளை விட்டுக்கொடுக்காது. இஸ்லாமிய வரையறைகளை மீறாது நிறைவேற்றப்படுதாக இருக்க வேண்டும். இப் புதுவருடத்தின் புதிய சிந்தனைகளாக அவை அமைய வேண்டும்.

மாறாக சொற்ப நலன்களுக்காக நமது செயற்பாடுகளில் இஸ்லாமிய வாழ்க்கை முறையையும் அதன் வழிகாட்டல்களையும் புறக்கணிக்கின்றபோது அல்லது மேற்குல நாகரியத்தின் வழியில் நாகரிகம் என அநாகரியத்தை நமது செயற்பாடுகளில்; காண்பிக்க முயற்சிக்கின்றபோது, அவற்றினால் சமூகம் காட்டிக்கொடுக்கப்படுகின்றபோது, அதன் பாதிப்பு சம சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரதும் தனித்துவத்தையும், இருப்பையும் இறைமையையும் பாதிக்கும் என்பதை மனதில் நிறுத்தி, புதிய ஆண்டியில் புதிய சிந்தனைகளோடு மாற்றங்களை நோக்கி பயணிக்க வல்ல இறைவனைப்; பிரார்த்திப்போமாக.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -