தலைவா !!!
இன்று உன் நினைவு தினமாம்....
என்றும் எம் நினைவுகளில் நீ இருக்க
இன்று மட்டும் எதற்கு ....
அன்றும் இன்றும் என்றும்
நீயே எம் தலைவன்........
தலைவா !!!
எங்கு சென்றாயோ நீ,
நீ வளர்த்த மரம்
இன்று செடியாகப் புதைந்து ...
மயிலாகப் பறந்து ....
குதிரையாக ஓடித் திரிகிறது.
உன் பெயரும் உன் புகைப்படமுமே
இன்று இவர்களின் அரசியல்
உன் கொள்கையும் உன் சிந்தனையும்
உன்னோடு அந்த மரத்தடியில் புதைக்கப்பட்டன.
அன்று நீ செய்த போர்
இன்று இவர்களின் அரசியல் வியாபாரம் .....
இன்று உன்னையே ஆணிவேராக்கி,
அந்த மரநிழலிலே
இன்புறுகிறது இந்தக் கூட்டம் ....
உன் சிந்தனை சிதைக்கப்படுகிறது
உன் கொள்கை மறைந்து போகிறது
உன் தியாகம் அழிக்கப்படுகிறது
உன் பாதை மூடப்படுகிறது......
தலைவா!!!
இன்று மரத்தின் நிழலும் நிஜமில்லை
அதை விதைத்த நீயும் எம்மோடில்லை....
மீண்டும் அநாதைகளாய்
நகர்கிறது எம் நாட்கள் ...
தலைவா!!!
எமக்காய் சிந்தித்த நீ
என்றும் எம் துஆக்களில் ...
மேலான சுவர்க்கம் நீ செல்ல
தினமும் பிராத்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
அஷ்ரப் அப்துர்ரஹ்மான்
16-09-2017