அல் அமீன் வித்தியாலயத்தின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

புதிய காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் 2 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மூன்று மாடிக் கட்டிடப் பணிகளை பூர்த்தி செய்ய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மேலும் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது “கிழக்கின் உதயம்” மற்றும் “தெயட்ட கிருல்ல” போன்ற திட்டங்களினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாய் நிதியில் அல் அமீன் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இப்பணிகளை மிக விரைவில் பூர்த்தி செய்வதற்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேலும் 5 மில்லியன் ரூபாய் நிதியை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒதுக்கீடு செய்துள்ளார். 

அண்மையில் கட்டிட நிர்மாண வேலைகளை பார்வையிட அல்அமீன் வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அங்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை சந்தித்து மேலதிக தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

இதற்கமைவாக பாடசாலைக்கான வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கும் தான் பங்களிப்பு வழங்குவதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -