கிழக்கு மாகாண பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை




எம்.எஸ்.நூர்தீன் -

 கி ழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 45ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் (3.8.2017) புதன்கிழமை மாலை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகமவுடன் (3.8.2017) புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த வயதெல்லையை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைதச்சர் குறிப்பிட்டார்.

வேலையில்லா பட்டதாரிகளில் பலர் 45 எனும் வயதெல்லையில் இருப்பதால் அவர்களுக்கு அரசாங்க தொழில் கிடைக்கும் வகையில் இந்த கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுனரிடத்தில் முன் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன் அத்தோடு இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான வயதெல்லையாக 45ஆக அதிகரிக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுனர் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லையை 45 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆளுனரின் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை (4.8.2017) வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படும் போது வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -