அமைச்சரவை மாற்றம், அவசியமாகத் தேவைப்படுகிறது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவில்லையெனில், அரசாங்கத்தில் இருப்பதை, தமது கட்சி, மீள்பரிசீலனை செய்யுமெனவும் தெரிவித்தார்.
"அமைச்சரவை மாற்றம், அவசியமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் எதிர்பார்த்துக் காத்திருப்பதால், இது, மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்தார்.
