மின்னல் தாக்கத்தோடு பாரிய மண்சரிவு ஆபத்து - மக்கள் வெளியேற்றம்

ப்புத்தளை தேத்தோட்டத்தில் (பிளக்வூட்) ஏற்பட்ட பாரிய மின்னல் தாக்கத்தோடு பாரிய மண்சரிவு ஆபத்து எதிர்நோக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அருகில் உள்ள பாடசாலையில் தங்காலிகமாக தங்கியிருக்கும் பாதிப்புற்ற 42 குடும்பங்களுக்குமான உலர் நிவாரண உதவிகளை பிரதேச செயலாகம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த குடும்பங்களுக்கான நிரந்தர தனி வீடுகளை பாதுகாப்பான இடத்தில் அமைத்துக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளதாக அமைச்சரின் ஊவா இணைப்பாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் ஊவா அமைப்பாளருமான எஸ்.ராஜமானிக்கம் தெரிவித்துள்ளார். 

பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாரளர் சங்கத்தின் தொழிலுறவு அதிகாரி சிற்றரசு மற்றும் ஐக்கயி தேசிய கட்சியின் ஹப்புத்தளை (தமிழ்) அமைப்பாளர் திவி முருகன் ஆகியயோருடன் களத்தில் நிற்கும் எஸ்.ராஜமாணிக்கம் கருத்துத் தெரிவிக்கையில்; 

அமைச்சர் திகாம்பரத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாhதிப்புற்ற மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அமைச்சருக்கு விபரங்களை அறிவித்தததாகவும் நாளை அமைச்சு செயலாளருடன் கலந்துரையாடி மேலதிக நிவாரணங்களைப்பெற்றுக்கொடுக்கவும் புதிய தனிவீடுகளை பாதுகாப்பான இடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -