இது மஹிந்த அரசாங்கத்தில் நடந்திருந்தால் ஓலம்மிட்டு அழுதிருப்பார்கள்...!
இப்போது ஓலமிட்டு அழுவதற்கு பதிலாக, ஒதிங்கி நிற்பதன் மர்மம் என்ன?
இந்த இனவாத நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியையோ, பிரதமரையோ குற்றம் சாட்டுவதற்கு இந்த நல்லாட்சிக்கு வாக்களித்த யாருமே முன்வராததன் காரணம் என்ன?
அதுமட்டுமல்ல, முசலி பிரதேசத்தை வில்பத்து காடு என்று நல்லரசாங்கம் வர்த்தமாணி அறிவித்தல் செய்துள்ளது, பொத்துவிலில் உள்ள முஸ்லிம்களின் பரம்பரை நெற்செய்கை காணிகளையும் காடுகள் என்று அறிவித்துவிட்டது இந்த நல்லரசாங்கம்...
அதுமட்டுமா?
ஞானசாரவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தில் பௌத்த சின்னங்களை பாதுகாக்க ஜனாதிபதி அவர்கள் குழுவும் அமைத்துள்ளார்.
வாக்களித்த மக்களும், இந்தாட்சிக்கு முட்டுக்கொடுக்கும் "கோடாரிக்காம்புகளான" முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதன் தலைவர்களும் வாய்மூடி மௌனிகளாக இருப்பதன் மர்மம் தான் என்ன?
மஹிந்த ஆட்சியில் எது நடந்தாலும், மஹிந்த மஹிந்த என்று கத்திய சிலபேர் இன்று பொந்துக்குள் ஒழிந்துகொண்டு எங்களுக்கு எதுவுமே தெறியாத மாதிரி குருடர்களைப்போல் நடிப்பதன் காரணம் என்ன?
இந்தாட்சியில் நிறைய விடயங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தாலும் அதற்கு மைத்திரியையோ, அல்லது ரணிலையோ குற்றம்சாட்ட இவர்கள் பின்நிற்பதன் நோக்கம் என்ன?
முஸ்லிம்களே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்....!
மஹிந்தவை எதிர்க்கின்றோம் என்ற நோக்கத்தில், இந்த நாகபாம்பு அரசாங்கம் செய்வதையெல்லம் அனுமதிக்காதீர்கள்...
இந்த அரசாங்கம் மஹிந்த அரசாங்கத்தை விட பயங்கரமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
இந்த விடயங்கள் அனைத்தும் நமது முஸ்லிம் தலைவர்களுக்கு நன்றாகவே தெறியும், அவர்களை தனிப்பட்ட முறையில் பேசிப்பாருங்கள் இதுதான் உண்மை என்பார்கள்....
இந்த உண்மையை அவர்கள் ரகசியமாக பல பேரிடம் கூறிவருவது மட்டுமல்ல, சந்தர்ப்பம் கிடைக்கும் போது பொது மேடைகளிலும் நாசுக்காக பேசியும் வருகின்றார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதேநேரம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்து விட்டோம், அதற்கு மக்கள் மாறியதுதான் காரணம் என்றும் கூறிவருகின்றார்கள்.
நாங்கள் தீர்மானிப்பதற்கு முன்னமே மக்கள் தீர்மானித்ததன் காரணமாகவே நாங்களும் மாறினோம் என்று முஸ்லிம் தலைவர்கள் தலையில் அடித்துக்கொள்ளும் நிலைமையையும் காண்கின்றோம்...
முஸ்லிம் மக்களை இந்தளவு மாற்றியதற்கு யார் காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பது வேதனையான விடயம்தான்.
இந்த சதிக்குப்பின்னால் மேற்குலக நாசகார சக்திகளும், டயஸ்போராக்களுமே இருக்கின்றார்கள் என்பதை புரியாத அப்பாவி முஸ்லிங்களை பற்றி நாம் என்ன சொல்ல முடியும்.
இந்த ஞானசார மேற்குலகின் ஏஜண்ட்டு என்பதை மக்கள் கவணிக்கத்தவறிவிட்டார்கள், இந்த நல்லரசாங்கத்தை கொண்டுவருவதற்கு பின்னால் இருந்து உதவி செய்தததே இவர்கள்தான், இப்போது இவர்கள் எங்கே தஞ்ஞம் அடைந்துள்ளார்கள் என்பதே இதற்கு சான்றாகும்...
ஆகவே, இந்த நல்லராங்கம் வாழைப்பழத்துக்குள் ஊசியை ஏற்றுவதுபோல் ஊசியை ஏற்றி முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குட்படுத்த முயற்சிக்கின்றது என்பதை முஸ்லிம்கள் கவணிக்க தவறினார்களேயானால், நாம் எதிர்காலத்தில் சொல்லொன்னா துயரத்தில் மாட்டிக் கொள்வோம் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை என்பதே உண்மையாகும்.......
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை....