திருகோணமலை.மயிலவெவ.தல்கஸ்வெவ.மோறாகம
காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (25) 10.00மணியளவில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கலன்பிந்துனுவெவ.தோறாவெவ பகுதியைச்சேர்ந்த எஸ்.ஆர்.சஞ்சய சங்க ரத்னாயக்க (40வயது) என்.ஜி.GAயான் சம்பத் மாரசிங்க (35வயது) மற்றும் கெக்கிராவ டிபோ ரோட் எம்.ஏ.அனுர (42வயது) கம்பஹா.டங்கல்ல பகுதியைச்சேர்ந்த எல்.ஜி.சன்தன சமன் குமார (30வயது) எனவும் தெரியவருகின்றது.
பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தேடுதல்களை மேற்கொண்ட போது அக்காட்டுப்பகுதியில் வைத்து அலவாங்கு மற்றும் கல் உடைக்கும் பெரிய சுட்டியல் போன்றவற்றுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு பேரையும் திருகோணமலை நீதிமன்றில் இனறு ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.