புதையல் தோண்டிய நான்கு பேர் கைது -கோமரங்கடவெல பொலிஸ்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை.மயிலவெவ.தல்கஸ்வெவ.மோறாகம
காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (25) 10.00மணியளவில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கலன்பிந்துனுவெவ.தோறாவெவ பகுதியைச்சேர்ந்த எஸ்.ஆர்.சஞ்சய சங்க ரத்னாயக்க (40வயது) என்.ஜி.GAயான் சம்பத் மாரசிங்க (35வயது) மற்றும் கெக்கிராவ டிபோ ரோட் எம்.ஏ.அனுர (42வயது) கம்பஹா.டங்கல்ல பகுதியைச்சேர்ந்த எல்.ஜி.சன்தன சமன் குமார (30வயது) எனவும் தெரியவருகின்றது.

பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தேடுதல்களை மேற்கொண்ட போது அக்காட்டுப்பகுதியில் வைத்து அலவாங்கு மற்றும் கல் உடைக்கும் பெரிய சுட்டியல் போன்றவற்றுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நான்கு பேரையும் திருகோணமலை நீதிமன்றில் இனறு ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -