பிள்ளையானின் பிணையை நிராகரித்த நீதிமன்றம்

சிநேசன்துரை சந்திரகாந்தன்
முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிநேசன்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் நிராகரித்தார்.

இன்று காலை மேல் நீதமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆறு சட்டத்தரணிகள் பிள்ளையான் தரப்பில் ஆஜராகினர்.

இருந்த போதிலும் மே மாதம் 4 ம்திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதுடன், மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2005.12.25 அன்று நத்தார் ஆராதனையில் மட்டக்களப்பு புனிதமரிளாள் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைபபு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -