சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லாமல் தேர்தலை நடத்துக - பைசர் முஸ்­த­பா

உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்­மைக்­கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வ­த­்துக்குப் பாதிப்பு ஏற்­படா வண்ணம் நடாத்­தும்­படி மல்­வத்து பீட மகா நாயக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்­த்த சுமங்­கல தேரர் மாகா­ண ச­பை­கள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.

இதே­வேளை, இன மற்றும் மத ரீதி­யான அர­சியல் கட்­சி­களைப் பதிவு செய்­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் இது நல்­லி­ணக்­கத்­துக்குப் பாதிப்­பாக அமை­யு­மெ­னவும் அஸ்கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மாகா­ண ச­பைகள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் நேற்று முன்­தினம் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடா­தி­பதிகளைச் சந்­தித்து நல்­லாசி பெற்­றுக்­கொண்டார். அச்­சந்­தர்ப்­பத்­திலே பீடா­தி­ப­திகள் இவ்­வேண்­டு­கோளை அமைச்­சரிடம் முன்­வைத்­தனர்.

புதிய தேர்தல் முறை­மையின் கீழ் சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­மெனக் கூறப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு பாதிப்­புக்கள் ஏற்­படாவண்ணம் தேர்­தலை நடாத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யுங்கள் என மல்­வத்து பீட மகாநாயக்க தேரர் வேண்டிக் கொண்டார்.

மல்­வத்து, அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­களின் ஆலோ­ச­னை­க­ளையும் வேண்­டு­கோள்­க­ளையும் ஏற்­றுக்­கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, ‘உள்­ளூராட்சி மன்­றத்­தேர்தல் கால தாம­தப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.

புதிய வட்­டார முறை­யையும் விகி­தா­சார முறையில் கலந்த கலப்பு தேர்தல் முறையில் கீழே தேர்தல் நடத்­தப்­படும்.

சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்­மைக்­கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு பாதிப்­புகள் ஏற்­ப­ட­மாட்­டாது. மாகாண சபை தேர்தல் சட்­டத்­திலும் சில திருத்தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு சிறு கட்­சிகள் மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­செய்­யப்­படும்.

எதிர்க்கட்­சி­யி­னரே பல குற்­றச்­சாட்­டுக்­களை வைத்து வரு­கி­றார்கள். அவர்கள் எந்த குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தாலும் எத்தரப்பையும் பாதிக்­காத வகை­யிலே தேர்தல் நடாத்­தப்­படும்.

தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தவில்லை.

எல்லை நிர்ணயங்களின் குறைபாடுகளை சீர்செய்து எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கே காலம் தேவைப்பட்டது. இது மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -