பல கட்சிகள் என்னை அழைக்கின்றது - எனது அடுத்த கட்டம் பொத்துவிலில் :ஹசன் அலி

ஹசன் அலி - முன்னாள் செயலாளர் நாயகம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பல கட்­சிகள், பல அமைப்­புகள் என்னை அழைக்­கின்­றன. எவ­ருக்கும் அழைக்கும் உரிமை இருக்­கி­றது. ஆனால் அவர்­க­ளுடன் இணை­வதா இல்­லையா? என்­பது பற்றி நான்தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

வெறும் அபி­வி­ருத்­தியை மாத்­தி­ர­மல்­லாது வட, கிழக்கு பிரச்­சி­னை­களை முதன்­மைப்­ப­டுத்தும் எந்தக் கட்­சி­யு­டனும் இணைந்து கொள்வேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும், முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹஸன் அலி தெரி­வித்தார். 

தனது எதிர்­கால அர­சியல் முன்­னேற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

கிழக்கில் கூட்டு முன்­ன­ணி­யொன்று உரு­வாக்கும் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த ஏற்­பா­டு­களில் புத்­தி­ஜீ­விகள் இருப்­ப­தாக அறி­கிறேன். இந்தக்கூட்டு முன்­ன­ணியின் கொள்­கைகள் என்ன? திட்­டங்கள் என்ன? வட–­கி­ழக்கு தொடர்­பான நிலைப்­பா­டுகள் என்ன? என்­ப­ன­வற்றை அறிந்து கொண்ட பின்பே கூட்டு முன்­ன­ணியில் இணைந்து கொள்­வ­தாக இல்­லையா-? என்று தீர்­மா­னிக்க முடியும்.

வெறும் அபி­வி­ருத்­தியை மட்டும் நோக்­கா­கவும் அமைச்சர் பத­வி­களை இலக்­கா­கவும் கொள்ளும், மக்­களை ஏமாற்றி வரும் கட்­சிகள், அமைப்­புகள் எமக்குத் தேவை­யில்லை. 

நான் தொடர்ந்து எனது அர­சியல் அபி­லா­ஷை­களை மக்­க­ளுக்குத் தெரி­வித்து வரு­கிறேன். தொடர்ந்து விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்­களை நடத்­த­வுள்ளேன்.

எனது அடுத்த கூட்டம் பொத்­து­விலில் நடை­பெறும். கிழக்கு மாகாணம் எங்கும் கூட்­டங்­களை நடத்­த­வுள்ளேன். அதன் பிறகு வடக்­கிற்கும் செல்வேன்.

வடக்கு மக்­க­ளுக்கும் அர­சியல் தெளி­வு­களை வழங்­குவேன். வடக்கு, கிழக்கில் எமது மக்­களின் காணிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். ஆனால் முஸ்­லிம்­காங்­கிரஸ் தீர்­வு­களை எட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. 

இறக்­காமம் மாணிக்­க­மடு சிலை வைப்­பி­னை­ய­டுத்து கிழக்கின் முஸ்­லிம்­களின் காணி­ உ­ரிமை சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­பல அர­சியல் வாதி­யொ­ருவர் இதன் பின்­ன­ணியில் இருந்து செயற்­ப­டு­கிறார். இதன் பிறகு பதவி, பட்டம், அமைச்சர் பதவி எனக்குத் தேவை­யில்லை. வட­கி­ழக்கு முஸ்­லிம்­களின் நிலை பரி­தா­பத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இம்­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிட்ட வேண்டும்.

பஷீர் சேகு தாவூதுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. எனது 32 வருட அரசியல் வாழ்வில் நான் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.  என்னை எவரும் ஏமாற்ற முடியாது என்றார். 

விடிவெள்ளி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -