வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு எமது மக்கள் பள்ளி வாயல்களும், வயல் வெளிகளும் சுட்டு கொல்லப்பட்ட அபாயகரமான சூழலை நீ உணர்ந்திருக்கிறாயா?
பொத்துவில் இருந்து யாழ்ப்பாணம் வரை அகதிகளாக, நிர்க்கதியாக, பல கிராமங்களிலும் அனாதரவாக்கப்பட்ட நிலையில் முப்பதாண்டுகளாக இன்றும் வாழ்வதை நீ உணர்கிறாயா?
வடக்கு கிழக்கு என்று இரண்டு மாகாணங்களாக பிரித்து ஆயுதம் தாங்கி போராட்ட குழுக்களுக்கு மத்தியில் ஜனநாயக குரலாக ஒலித்து எமக்கான அடையாளத்தை உருவாக்கியது யார் என அறிந்து வைத்திருக்கிறாயா?
மறைந்த தலைவருடன் அவரின் நெருக்கத்துக்குரியவராகவும் அவரின் அரசியல் கொள்கைகளை பல சவால் களுடன் முன்னெடுத்துச் சென்றவர் யாரென நினைக்கின்றாய்.? தன்னை தலைமையென மக்கள் பேச வேண்டும் என விளம்பர ஊடகங்களை கையில் வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் அற்ப அரசியல் செய்கின்ற போலி களின் மத்தியில் தான் மிகப் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த பிரதேசங்களில் கூட அந்த மக்களின் அரசியல் சமநிலையை அரசியல் அதிகாரங்களை வீண் புகழுக்காக குழறுபடி செய்யாத தலைமை தொடர்பில் நீ அறிந்திருக்கிறாயா?
தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்ள மக்களின் விருப்பங்களை நாடி பிடித்து அதற்கேற்றாப் போல் நாடகங்கள் ஆடும் தலைமைகள் மத்தியில் உண்மையையும் நியாயத்தையும் தர்மங்களையும் எடுத்துரைத்த அதற்க்காக
தனது அரசியல் அதிகாரங்களை இழந்து மக்களுக்காக வாழுகின்ற தலைமையை நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா?
மகிந்த அரசில் பேரினவாதிகள் முன் வைத்த கோரிக்கைகளை அவர்களின் கோசங்களை அடக்கி இருக்கின்றோம் என கூறிய நல்லாட்சி அவர்களின் கோசங்களை சத்தமின்றி நடை முறைப்படுத்துகின்ற இந்த விடயத்தை இரண்டு ஆண்டுகளின் முன் குறிப்பிட்டு எம்மவர்களால் புரிதலுக்குட்படுத்த முடியாமல் போன அரசியல் வித்தகனை அறிவாயா?
இன்றுமொருமுறை நீ புரிதலுக்குட்படுத்த வேண்டிய விடயங்களாக விபரமறியா முஸ்லீம் அப்பாவி சனங்களை தெளிவு நிலைக்குட்படுத்த முன் வர வேண்டும இதுவே காலத்தின் தேவை.
எனது இளைஞனே!!
1.ஞானசாரதேரர் மகிந்த அரசில் வில்பத்து பிரதேசத்தை பார்வைஇட சென்ற போது கிளர்ந்து எழுந்த எம்மவர்கள் இன்றைய அரசால் அது தொடர்பில் முஸ்லீம் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் போது என்ன சொல்லப் போகிறார்கள்.
2.தம்புள்ளை பள்ளிவாசல் கருமலையூற்று பள்ளிவாசல் விடயங்களில் மகிந்த அரசில் எழுப்ப பட்ட கோசங்களுக்கு மகிந்த அரசு முன் வைத்த நியாயமான தீர்வு களையும் நல்லாட்சி அரசு முஸ்லிம் மக்களுக்கு எதிராக எட்டியிருக்கும் பாரதூரமான முடிவுகளையும் பற்றி சிந்திக்க வேண்டாமா?
யுத்தத்தை நிறைவு செய்து தனது ஆட்டங்களுக்கு தாளமிசைக்காத மகிந்தவை வீட்டுக்கனுப்ப சர்வதேசம் எம்மை மிக கவனமாக பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பதை உணர்ந்து கொள்.
இன்னும் புரியாதவர்களாக வேசமிடும் எழுத்தாணிகளை ஆராய்ந்து பார் அதாஉல்லாஹ் க்கு எதிரான கோசத்தில் குறைந்தது இடமாற்றம் செய்து தரவில்லை எனும் சுயநலமாவது இருக்கும்.
வாய்மை காவு கொள்ளப்படுதலும் பொய்மை வெற்றி கொள்ளப்படுதலும் சிறுது காலமே... வாய்மைதான் நிரந்தரமாக வெற்றியடையும் என்பதையும் உணர்ந்து கொள்வாய்.