கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால்ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் நஸீர் கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு
சப்னி அஹமட்- 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள04பிராந்தியங்களுக்கும் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் 2016ஆம் ஆண்டு மேற்கொண்டுள்ளஅபிவிருத்திகள் தொடர்பாகவும் 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள்தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் நேற்று (07)மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது.


அங்கு இக்குழுவினால் 2017ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 04பிராந்தியாங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கையாள்கை தொடர்பாகவும், நிர்மாணவேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், நிர்மானவேலைகளில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும், வைத்தியசாலைக்கு தேவையான இயந்திரங்கள்தொடர்பாகவும், ஆளனிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளவாகனப்பிரச்சினைகள் தொடர்பாகவும், சில முக்கிய வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதுதொடர்பாகவும், வைத்தியசாலைகளின் பாதுகாப்பு விஸ்தரிப்பது தொடர்பாகவும், முழுமையாகஆராய்ப்பட்டது.


மேலும், ஆலம்குளம், ஒலுவில், மூதூர், கிண்ணியா, அட்டாளைச்சேனை, பாலமுனை, தம்பலகாமம்,புல்மோட்டை, கோமரங்கடாவ, வானெல, ஈச்சலம்பற்று, சம்பூர், வாழைச்சேனை, ஆரயம்பதி, ஓட்டமாவடி,கிரான், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், சந்திவெளி, பன்சய, கூலாவடி, வாகரை, உன்னிச்சை,சாய்ந்தமருது, இஸ்லாமாபாத், திருக்கோவில், சென்னல் கிராம, சென்றல்கேப், ஒலுவில், சம்மாந்துறைஉள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்தொடர்பாகவும், ஒதுக்கப்படவுள்ள நிதிகள் தொடர்பால்கவும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும்பேசப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், சுகாதார அமைச்சின் பொறியியலாளர், மேலதிகமாகாணப்பணிப்பாளர், சமூக வைத்திய நிபுணர், திட்டமிடல் வைத்திய அதிகாரி, கல்முனை-திருகோணமலை-மட்டக்களப்பு சுகாதார பணிப்பாளர்கள், பிராந்திய் அலுவல பணிப்பாளர்கள், சுகாதாரஅமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


மேலும் அங்கு11 வைத்தியசாலைகளுக்கு மத்தியர்சினால் ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும்ஒதுக்கப்பட்ட 10மில்லியங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டதுடன் இன்னும் பல வைத்தியசாலைகள்தொடர்பாக பிராந்திய பணிப்பாளர்கள் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீரினால் பேசப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -