கடுகன்னாவ, பெலுங்கல குடி நீர் வழங்கல் திட்டத்தை வழங்கிய அமைச்சர் ஹக்கீம்!

டுகன்னாவ, பெலுங்கல குடி நீர் வழங்கல் திட்டம் மற்றும் நீர் பம்பி நிலையம் போன்றவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (25) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

பெலுங்கல, பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்திக்கும் வகையில், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 250 குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடுகன்னாவ பிரதேச அமைப்பாளர் முஸம்மர் கடாபி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -