லிந்துலை மெராயா பகுதியில் சூறாவளி - 33 வீடுகள் சேதம்

க.கிஷாந்தன்-
மெராயா பகுதியில் 08.03.2017 அன்று மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பாதிப்படைந்த வீடுகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் அடங்குவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சூறாவளி ஓல்ட்ரிம் தோட்டத்துக்கு சொந்தமான கௌலினா பிரிவும் மற்றும் என்போல்ட் தோட்டப்பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

இதில் கௌலினா தோட்டத்தில் 25 வீடுகளும், என்போல்ட் பகுதியில் 8 வீடுகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -