சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏறாவூர் நகர சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் பொது நூலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு வைபவமும் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபை விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.நிபாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகிழ்வின்போது ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தர் திருமதி.சுலைஹா நௌபர், நூலகர் திருமதி விமலா சித்திரவேல், நூலக உதவியாளர் திருமதி அப்பாசியா அஹமட், முன்பள்ளி ஆசிரியை திருமதி இராசநாயகி சன்முகம் , திருமதி என்.எம்.மாஜிதா ரஹ்மான் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முகம்மட் சப்ராஸ்-