மீனோடைக்கட்டு நிருபர்-
இலங்கையில் முதல் முறையாக ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை அண்மையில் அம்பாறை மாவட்ட நிந்தவுர் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.முஹம்மட் நக்பரின் சேவையை பாராட்டியும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் சேவையையும் பாராட்டி சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிமினால் ஞாபகச் சின்னம் மற்றும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும், அதிதிகள் மற்றும் கலந்துகொண்ட பொதுமக்களின் ஓரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



