மகனின் பஸ்ஸில் சிக்குண்டு தந்தை பலி - சோக சம்பவம்

க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 27.02.2017 அன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் தனியார் பஸ் சாரதி தனது பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் நிறுத்துவதற்காக செல்லும் வேளையில் பஸ்ஸை பின்நோக்கி செலுத்தும் பொழுது வீதி ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த 86 வயதுடைய முதியவர் பஸ்ஸின் பின்பகுதி சில்லில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மேற்படி பஸ்ஸை செலுத்திய சாரதியின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் ஆறுமுகம் மாரியப்பன் (வயது 86) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பஸ்ஸையும் பொலிஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -