வில்பத்து தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு

வனப்பாதுகாப்பு உழியர்கள், வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களை சேகரித்து அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

வனப்பாதுகாப்பு உழியர்கள் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஆகாய விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலய எல்லை நிர்ணயம், தவறாக முஸ்லிம் குடியேற்றங்களை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.

இதனை வனபரிபாலன சபை ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியூதீனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களை, தவறாக வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குற்படுத்திய தவறை திருத்துவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் போது காணி ஒதுக்குதலில் கடைப்பிடிக்கப்பட்ட நிர்வாக நடை முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மேற்குறித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் றிஸாட் பதியூதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -