இலங்கையின் நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு UNDP 38.1 மில்லியன் உதவி..!

அஷ்ரப் ஏ சமத்-
லங்கையின் காலநிலை மாற்றத்தினை தாக்குபிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டம் (Green Climate Fund) காலநிலை மாற்றத்தினால் இலங்கையில் உலா் வலயத்தில் வாழும் சமுகங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் தொடா்பிலான பிரதிகூலமான விளைவுகள் தொடா்பில் உதவிகளை வழங்கியுள்ளது.

மேற்படி விடயமாக நேற்று (19) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் யுஎன்டிபி இலங்கைப் பிரநிதி யுனா மக்குரி மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளா் லலித் சந்திரபால, மற்றும் தொழில்நுட்ப ஆலோசகா்கள் காலாநிதி தென்னக்கோன், காலநிலை தினைக்ககளத்தின் பணிப்பாளா் காலாநிதி ஜெயசிங்க ஆகியோா்களினால் காலநிலை மாற்றம் சம்பந்தமாக கருத்துக்களைத் தெரிவித்தனா் 

பசுமை காலநிலை நிதியத்திலிருந்து அமேரிக்க டொலா் 38.1 மில்லியன் பெறப்பட்டு அதன் மூலம் உலா் வலயங்களில் வாழும் சிறிய விவசாயிகள் பல்வேறு விதமான காலநிலை வித்தியாசங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் தீவிர பாதிப்புக்கள் தொடா்பிலும் தாக்குப்பிடிக்கும் பொருட்டு இலவா்களை வலுப்படுத்தி முன்னெடுப்பதே பிரதான குறிக்கோளாகும். 

இத்திட்டமானது இலங்கையில் உள்ள உலா் வலயங்களிலுள்ள மூன்று நதிகளின் நீல் மேலாண்மையை ஒருங்கிணைத்து தீா்வுகள் வழங்குவதன் மூலம் அரசிற்கு உதவ முடிகிறது. இத்திட்டமானது உயா் மட்டத்திலான உணவு, வாழ்வதாரம், மற்றும் உணவு பாதுகாப்பு, என்பவற்றை வெள்ளம் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஏழை சமுகங்களுக்காக பெற்றுக் கொடுத்தலே இதன் பிரதான இலக்காகவுள்ளது. மகாவலி சூற்றாடல் அமைச்சராக பொறுப்பு வகிக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பேச்சுவாா்த்தையில் இவ் உதவித் திட்டம் வழங்கப்பட்டது. 

பசுமை காலநிலை நிதியத்தின் மூலம் நீர்பாசன மற்றும் சூ ழல் அமைப்புச் சாா்ந்த விவிசாய நடைமுறைகள் , சமுகத்தினால் நிர்வகிக்ப்பட்ட குடிநீா் உள்கட்டமைப்பு மேம்படுத்தல், குடிநீர் அமைப்புக்களின் அளவீடுகளை பரவலாக்குதல் மற்றும் ஆரம்ப எச்சரிக்கைகளை வலுப்படுத்தல். விவசாயிகளின் பாதுகாப்பு, தொடா்பில் முன்னறிவிப்பு மற்றும் காலநிலை ஆலோசனைகள் வழங்குதல் முக்கியமாக பெண்களை காலநிலை சம்பந்தமான தாக்கங்களிலிருந்து பாதுகாத்தல் பிரதாணமானதாகும்.

இத்திட்டமானது மூன்று நதிகளைச் அண்டி வாழ்கின்ற 750.000 மக்களுக்கு இந்த நேரடியான முதலீட்டின் மூலம் நீர்ப்பாசனம், குடிநீர், வசதி மற்றும் இடா்முகாமை மேலாண்மை தொடா்பில் நன்மை பயப்பதாகவுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக சுமாா் இம்மாவட்டத்தில் வாழும் 77,000 மக்களுக்கு மறைமுகமாக ஆற்றல் தொடா்பிலான திட்ட த லையீடுகள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை முறைமைகள் மூலம் நன்மை அடைகிறாா்கள். இத்திட்டம் 2017 முதல் 2024 வரை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

பசுமை காலநிலை நிதியத்தின் இலங்கை 14 மில்லியன் டொலரை இத்திட்டத்திற்காக அரச இனை நிதியத்திற்கு வழங்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் (1) பெண்களின் தலைமையிலான குடும்பங்கள், எதிா்பாா்த்த கிராமங்களின் வேலையற்ற இளம் பெண்கள், அங்கவீனம், சிறுநீா் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மோதலினால் இடம்பெயா்ந்துவா்கள்-மீள குடியேற்றப்பட்டவா்கள், கடந்த 5வருடங்களுக்குள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவா்கள், குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் பெண்களின் போஷாக்கின்மை காணக்கூடியதாகவிருத்தல் (எடைகுறைவு- இரத்தச்சோகை) துணைக்குழுக்களினால் ஆபத்திலுள்ள குடும்பங்கள் அத்தகைய பிள்ளைகள், மற்றம் பெண் பிள்ளைகள் (குடும்பங்களின் கடமைகளைச் சுமக்கும் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்லாத புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகள் ஆபத்திலுள்ள பெண் பிள்ளைகள்)

இத்திட்டம் வடக்கு மேற்கு, வட மத்திய. வடக்கு கிழக்கு மகாணங்களில் செலவழிக்கப்படும்.  (குருநாகல், புத்தளம், அநுராதபுரம், வவுனியா, மன்னாா். பொலநருவை, மற்றும் திருகோணமலை, எல்லைப்பகுதிகள்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -