காலத்தின் தேவை கருதி ஹஸன் அலி க்கு தேசியப்பட்டியல் வழங்குதல் நன்று -நசீர்

காலத்தின் தேவை கருதி ஹஸன் அலி க்கு தேசியப்பட்டியல் வழங்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்க்கூடியது என்று அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் வழங்குதல் சம்மந்தமாக கட்சித்தலைவரால் வழங்கப்பட்டு வரும் வாக்குறுதி சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தளம் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் நசீரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கட்டாயம் வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குதல் இன்றய கட்டாயத்தேவையாக இருக்கிறது ஆனால் இன்றய கட்சியின் நிலைமையினைக்  கருத்தில் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்கு முதலில் வழங்கிவிட்டு மீதமுள்ள திருகோணமலைக்கு இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தேசியப்பட்டியலின் மீதிப் பகுதியை வழங்குதல் கட்டாயம் என்று என்று கருத்தினைத் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -