துருக்கியிலுள்ள ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்கார நகரில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புகைப்பட கண்காட்சியொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -