தீகவாபியில் குடிபோதையில் முஸ்லிம்களை தாக்கிய இரு சிங்களவர்களுக்கு விளக்க மறியல்

அப்துல்லாஹ் இப்னு அன்சார் -

தீகவாபியில் கடந்த 02ம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரு சிங்களவர்கள் தமண பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று (14) ஆஜர்செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தீகாவபியை சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எம்.பஹிஜ், யூ.எல்.வசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்நபர்கள் வீதியால் சென்றவர்களை மறித்து மது போதையில் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இறக்காம பிரதேசத்தைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இம்ரான் , அக்கரைப்பற்று மாநகர சபையின் மன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் உட்பட வீதியால் பயணித்த பலரை தாக்கியதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தாக்கி உடைத்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் இன்னும் சிலரை கைது செய்வதற்காக பொலிசார் வலைவீசி வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -