
சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளுக்கான தேசிய விருதுக்கு அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது,
அதற்கான பரிசளிப்பு விழா இன்று 2016.11.28 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஜனாதிபதி மைத்திரி பால சிறாசேன வின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் விருதினைப் பெற்றுக்கொண்ட
அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ஏ.எம்.மிஸ்வர், பொறுப்பாசிரியர் ஜே.பஸ்மிர் வலயத்திற்கான சுகாதார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.ஹம்மாத் -ISA, மற்றும் சகல ஆசிரியர்களுக்கும் சுகாதாரக் கழக மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார் அந்நூர் மகாவித்தியாலய பழய மாணவரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளருமான எஸ்.எல்.முனாஸ்.