போலியான நாமல் ராஜபக்சவை உடன் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி கிஹான் பிலபிட்டிய இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவென தன்னை அறிமுகம் செய்து, முன்னாள் விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் அம்பாறை நகர சபையின் முன்னாள் தலைவரையே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு சமூமகளிக்காமையினால் பிரதி வாதியை உடன் கைது செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிக்கு கடந்த 2011 மார்ச் மாதம் 28 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் இந்த தொலைபேசி அழைப்பை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
