எனக்கு அடித்தல் நானும் அடிப்பேன் - பிரதமர்

டகங்களினால் எனக்கு அடித்தல் நானும் திருப்பி அடிப்பேன் எனவும் அதுவும் நான் திருப்பி அடிப்பது பகிரங்கமாக பேச்சினால் மாத்திரமே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமனறத்தில் தெரிவித்தார்.

ஊடக நிலையங்களுக்கு தீ வைப்பது, ஊடகவியலாளர்களை கடத்துவது போன்ற விடயங்கள் எனக்கோ ஜனாதிபதிக்கோ தேவை இல்லை என சுட்டிக்காட்டினார்.

தானும் ஜனாதிபதியும் ஊடகங்கள் விடும் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை ஊடகவியலாளர் கடத்தல், கொலை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற அடக்குமுறைச் சம்பவங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெறாவிட்டாலும், ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் இன்னுமொருபோக்கு காணப்படுகிறது’ என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமனறத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -