மாவட்ட சமாதான நீதிவானாக ஏறாவூர் இஸ்ஸதீன் நியமனம்..!

ட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம்.இஸ்ஸதீன் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைரின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.இஸ்ஸதீன், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன், றஹ{மா அமைப்பின் செயலாளரும் ஆவார். 

இவருக்கான நியமனக் கடிதம் இன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -