காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெதகெதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தற்போது நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் (ஐ.பி.) ஆரியபந்து வெதகெதர (சி.ஐ.) பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான பதவி உயர்வு நியமனக் கடிதத்தை இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வழங்கியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றதையேடுத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியபந்து வெதகெதரவுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -