றிஸ்கான் முகம்மட்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளாரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இன்று (01/09/2016) மாலை 07.30க்கு கல்முனை கடற்கரைப்பள்ளி பிரதான வீதிச் சந்திக்கருகில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இக் கூட்டதிற்கு பிரதம அதிதியாக: கெளரவ. அல்ஹாஜ். றிஷாட் பதியுதீன் தேசிய தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அவர்களும், மற்றும் கெளரவ அதிதியாக: கெளரவ. அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அவர்களும் மற்றும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உயர்பபீட உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாட்டுக் குழு,
அ.இ.ம.கா.கல்முனை தொகுதி.