அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாபெரும் பொதுக் கூட்டம் இன்று கல்முனையில்...!

றிஸ்கான் முகம்மட்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளாரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இன்று (01/09/2016) மாலை 07.30க்கு கல்முனை கடற்கரைப்பள்ளி பிரதான வீதிச் சந்திக்கருகில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இக் கூட்டதிற்கு பிரதம அதிதியாக: கெளரவ. அல்ஹாஜ். றிஷாட் பதியுதீன் தேசிய தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அவர்களும், மற்றும் கெளரவ அதிதியாக: கெளரவ. அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அவர்களும் மற்றும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உயர்பபீட உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு, 
அ.இ.ம.கா.கல்முனை தொகுதி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -