பிரேசில் ஜனாதிபதி பதவி நீக்கம்..!

பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரோசெஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் மீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவரது ஜனாதிபதி பதவி பறிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலின் ஜனாதிபதியாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தில்மா ரூசெப் (68) அந்நாட்டின் 36ஆவது ஜனாதிபதியாக 2011ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேசிய நிதி நிலை அறிக்கையை திருத்தி முறைகேடு செய்து நாட்டிற்கு பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த மே மாதம் பாராளுமன்ற செனட் சபை, தில்மா ரூசெப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு செய்ததது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டு தேசிய காங்கிரஸ் எனப்படும், பாராளுமன்றக் கூட்டத்தொடரின் செனட் சபையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தம் 81 உறுப்பினர்களில் 61 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 20 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து அவரது ஜனாதிபதி பதவி பறிக்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக தில்மா ரூசெப் பதவியேற்றார். 2014-ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தார்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி தலைவர் மிகைல் டெமர் பிரேசிலின் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்போற்று செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -