நாமலுடன் தொடர்புடைய சுஜானிக்கு பிணை...!

சுஜானி போகொல்லாகம கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்‌ஷவின் கவர்ஸ் கோபரேஷன் மற்றும் என்.ஆர். கன்சல்டன்ட் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற ரூபா 45 மில்லியன் நிதி மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு அலுத்கடை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் மகளான சுஜானியை, ரூபா ஒரு இலட்சம் ரொக்கம் மற்றும் ரூபா 100 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சுஜானி கடந்த வாரம் முதல், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -