மீள்குடியேற்ற செயலணியையும் அதன் நடவடிக்கைகளையும் குழப்பும் அஸ்மீன் - சுபியான் மௌலவி

பாறுக் ஷிஹான்-
டக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயலணியையும் அதன் நடவடிக்கைகளையும் குழப்பும் முயற்சியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் ஈடுபட்டுள்ளதாக வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளரும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரதிநிதியுமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெறும் கூட்டங்கள்இ அமர்வுகள் குறித்து ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றின் ஊடாக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முஸ்லிம் மீள்குடியேற்றத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் காணி வாழ்வாதாரம் கல்வி சுகாதாரம் உட்பட அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் இரண்டு அமைச்சர்களும் இணைந்து கடந்த மாதம் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் பிரகாரம் வடமாகாண முஸ்லிம்களுக்கு 16500க்கும் அதிகமான வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளது. இதில் 2000ற்கும் அதிகமான வீடுகள் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்கவுள்ளது. அத்துடன் இதற்குத் தேவையான உட்கட்டுமான வசதிகள் உட்பட அனைத்தும் செய்து தரப்படவுள்ளது.

இவ்வாறு மீள்குடியேற்றத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையில் இச்செயலணிக்கு வடமாகாணசபை ஏற்கனவே தனது எதிர்ப்பு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. கடந்த இரண்டரை வருடங்களில் வடமாகாண சபையானது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எவ்விதமான பங்களிப்புகளையும் செய்யவில்லை. இந்நிலையில்தான் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான விஷேட பிரேரணையை அமைச்சரவையில் முன்வைத்து அங்கீகாரம் பெற்றுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நியமன உறுப்பினராக அய்யூப் அஸ்மினை வடமாகாணசபைக்கு நியமித்ததிற்கு நன்றிக் கடனாக அவர் அவர்களின் செயல்களுக்கு ஒத்து ஊதுவது போல் தனது செயல்முறைகளை கொண்டு இருப்பது கவலைக்குரியதாகும்.

இவர் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள 'யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வு' இவ்வாறான ஒன்றேயாகும். இது அப்பட்டமாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் முன்னெடுத்து வரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் உட்பட வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற முன்னெடுப்புகளைக் குழப்புவதற்கு எடுக்கும் நடவடிக்கையாகும். வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் இது தொடர்பாக தனது அறிக்கை ஒன்றில் 2009 – 2016 வரையிலான கடந்த ஏழு வருடங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக தம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது சாத்தியமற்றுப் போயிற்று என்றும் சிவில் சமூக செயற்பாட்டின் மூலமே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களை தம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இவர் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் பல்வேறு உட்கட்டுமான வேலைகளும்இ மீள்குடியேற்ற முன்னெடுப்புகளும் நடந்தேறியுள்ளது. இவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எங்கள் அரசியல் பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் பலத்தின் மூலமே சாத்தியமாக்கினோம். இதற்கு மக்கள் எங்களுக்கு தந்த அரசியல்பலம்தான் காரணமாகும். இன்று வடமாகாண முஸ்லிம்களுக்காக அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரமும் அரசியல் பலம் காரணமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனவே கூட்டங்களையும் அமர்வுகளையும் நடத்தும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால் தமிழ் தேசியவாதிகளுக்கு தனது விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்காகவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயலணியையும் அதன் நடவடிக்கைகளையும் குழப்பும் வகையில் இவருடைய செயல்கள் அமையக்கூடாது. எவ்வித நன்மைகளையும் பெற்றுத்தராத இவ்வாறான அமர்வுகளினால் இவர் அரசியல் ஆதாயம் அடையலாம். மக்களும்இ சமூகமும் ஏமாற்றப்படுகின்றார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே விழிப்புடன் இருக்குமாறு மக்களை வேண்டிக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -