இலங்கை எல்லைக்குள் பிரவேசித்த மர்ம விமானம் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமானது..!

லங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் இலங்கை விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது. சி. 37 பீ.எல்.எப். ரக கல்ப் ஸ்ட்ரீட் எனும் பெயரிலான அமெரிக்க விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானம் இலங்கைக்கு வருகை தந்ததில் மர்மங்கள் எதுவும் இல்லையெனவும் அது சாதாரண விஜயம் எனவும் இலங்கை விமானப் படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமானது என்பது உண்மையாகும். இலங்கைக்கு மேற்கொண்ட சாதாரண விஜயத்தின் போது திருகோணமலை சீனத் துறைமுகத்திலும் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பின்னர், இந்த அமெரிக்க விமானம் கட்டுநாயக்கவினூடாக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -