முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
அண்மையில் மன்னார் விசாரணைக் குழுவில் தோன்றிய தமிழ்ப் பெண் ஒருவர் பின்வரும் கருத்தை முன்வைத்திருந்தார்.அதாவது ஷஅமைச்சர் றிசாத் பதியுதீனை ஏன் மீள்குடியேற்ற அமைச்சராக்கி வவுனியா அகதி முகாமுக்குள் விட்டீர்கள||. இது ஒரு மடமைத்தனமான நன்றி கெட்ட கருத்தாகும்.முள் வேலியால் அடைக்கப்பட்ட அகதி முகாமில் இரவுபகல் பாராமல் சேவை செய்த அமைச்சரின் சேவையையும் 300000 மக்களையும் மீள்குடியேற்றியதையும் உரிய பெண்மட்டும் மறந்துவிட்டாரா ? அல்லது முழு வன்னித் தமிழ் சமூகமும் மறந்து விட்டதா ?
ஷஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
|செய்ந்நன்றி கொன்ற மகற்கு|
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் பின்வருமாறு பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.அதாவது நீதிமன்றுக்கு கல் எறிந்தவர்.மக்கள் நம்பிக்கை இழந்தவர் றிசாத் பதியுதீன்,இவர் முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்றும் கூறி முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார்.இவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிருபிப்பாரா ?....இவர் அரசியல் கன்றுக்குட்டி இனவாதம் பேசி நிலைபெறத் துடிக்கிறார்.பாவம்.
தோல்வியையே காணாத முஸ்லிம்களின் முழுநம்பிக்கை நட்சத்திரம் ஆகிய றிசாத் பதியுதீன் அரசியலில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்.கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம்,குருனாகல்,அம்பாறை மாவட்டங்களில் சொற்ப வாக்குகளாலேயே பிரதிநிதித்துவம் தவறியது.அவையும் கிடைத்திருந்தால் ஏ.சி.எம்.சி 9,10 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிரு;க்கும்.இன்று 5 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முழு அமைச்சு ,இராஜாங்க அமைச்சு என பலமாகவே உள்ளது.
மஹிந்த அரசில் இருந்து நல்லாட்சிக்காக முதலில் பாய்ந்த சிறுபான்மை அமைச்சர் இவரே. நீர் சொல்;வது போல தந்தை மகன் உறவென்றால் எப்படி தந்தைக்கெதிராக மகன் எதிரணிக்கு செல்ல முடியும் .அமைச்சர் றிசாத் பாய்ந்ததும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை விட்டார் வன்னியில் சில ஆயிரம் வாக்குகள்தான் இது எமக்கு பாதிப்பில்லை என தப்புக்கணக்குப் போட்டார்.சரியான கணக்கைப்போட்ட பிரதமர் ரணிலும்,ஜனாதிபதி மைத்திரியும் சரியான இடத்தைக்கொடுத்து பொருளாதார அமைச்சையே அவருக்கு மீண்டும் கொடுத்துள்ளனர்.இதில் அமைச்சரின் மக்கள் பலம்,திறமை,நேர்மை என்பன புலனாகின்றன.
அமைச்சர் அஸ்ரபின் தனிமனித ஆளுமை எப்படி சி.மு.கா ஜ வளர்த்ததோ அதேபோல றிசாத் பதியுதீனின் தனிமனித ஆளுமை அகில இலங்கை மக்கள் காங்கிரசை வளர்த்து வருகிறது.அனுராதபுர வெற்றி வரலாற்றுச் சான்று.முஸ்லிம்கள் அதிகம் வாழும் எந்த மாவட்டத்தில் போட்டியிட்டாலும் இவர் வெல்வார்.
தமிழ்த் தரப்பு இனவாத விமர்சனத்தையெல்லாம் ஆராய்கின்ற போது நன்கு திட்டமிட்ட அடிப்படையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான சேறு பூசல்களில்சிலர் ஈடுபடுவது தெட்டத்தெளிவாகவுள்ளது.
மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டது ,பலவந்தமாக இனச்சுத்தீகரிப்பு அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் , முஸ்லிம் மக்களையும் துரிதமாக குடியேற்றுவதற்காகவே இது உருவாக்கப்பட்டது.
இவ்விடயத்தில் தமிழ் மக்களோ அல்லது தமிழ் அரசியல் வாதிகளோ ; மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை. வுடமாகாணத்தில் சிங்கள,முஸ்லிம் மக்கள் வாழக்கூடாது என்ற முடிவை தமிழ்ப்புலிகள் எப்படி உறுதியான பாஷிச சிந்தனையில் ; இருந்தார்களோ ; அதே சிந்தனையில் தமிழ் அரசியல் வாதிகள் இன்றும் உள்ளதை நாம் அறிவோம்.
தம்பி நிர்மலநாதன் அவர்களே எமது அமைச்சர் எமக்குப் போதுமானவர்.அவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அவரின் சமூகத்தை மீள குடியேற்றமுடியாத கையறு நிலை அவருக்கு ஏற்பட்டது.ஏனெனில் வடக்கில் முஸ்லிம் வாழ்ந்த பூர்வீகப்பகுதிகள் புலிக ளின் கட்டுப்பாட்டில் இருந்தன.இதனாலேயே முஸ்லிம்களை அவரால் மீள்குடியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.மீள்குடியேற்ற முடியாமல் போன ஆதங்கம் ,,கவலை என்பன இன்றும் அவரை ஆட்கொண்டுள்ளதை யாம் அறிவோம்.
வுன்னியுத்தத்தால் அகதிகளாகிய 30000தமிழ் மக்களை இவரால் மீள' குடியேற்ற முடிந்தது.நீங்கள் அமைச்சரை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றால்ஷ நாங்கள் வடமாகாண முதலமைச்சரை ஏற்றுக் கொள்ளமுடியாது என்போம்.|
ஆகவே, அவரின் மக்களை மீள்குடியேற்ற செயலனியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இட்டு வடமாகாண புத்திஜீவிகள் ,பள்ளி பரிபாலான சபையினர்,முஸ்லிம் சமூக சேவை அமைப்புக்கள் ,முஸ்லிம் பொது மக்க்ள், வடபுல முஸ்லிம் ஊடகவியலாளர் அனைவரும் மகிழ்வடைந்துள்ளனர்.
'வைக்கோல் படைப்பை காவல் காக்கும் ஞமலி போல' பசுவையும் மேயவிடாமல் தானும் மேயாமல் செய்ற்பட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறோம்.