அஹமட் இர்சாட், எப்.முபாறக் -
புல்மோட்டை அரிசிமாலை பகுதியில் 2004 ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிகாப் நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு கடற் படையினரால் 2008 ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் மாகாண சபை உறுப்பினர் ஆர். எம்.அன்வர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்களின் முயற்ச்சியால் கடந்த பெப்ரவரி மாதம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் காலித் என்னும் வீட்டு உறிமையாளரிடம் கையளிக்கப்பட்ட்து .
குறித்த இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது அரிசிமாலையை சேர்ந்த பௌத்த பிக்கு குறித்த வீட்டை நாசப்படுத்தி தனக்கு சொந்தமாக்கும் நோக்கில் மேலதிக கட்டுமான பணிகளை மேற்கொண்டார் பின்னர் உரியவரிடம் தனது பொருட்களை தரும்படி அடிக்கடி பிரச்சினையை ஏற்படுத்தி வந்தார் நேற்று வெள்ளிக்கிழமை (12) காலித் சுகயீனம் காரணமாக வைத்திய சாலை சென்ற வேலை பௌத்த பிக்கு மூன்று நபரை அனுப்பி குறித்த வீட்டின் கதவு நிலை ஜன்னல் மற்றும் கூரைகளை கழட்டுவதற்க்காக முழு வீட்டையும் நாசப்படுத்தி இருந்தார்.
பின்னர் நேற்றைய தினம் திடீர் என புகுந்த காலித் உடைக்கப்படும் நிலை கண்டவுடன் மூவரும் ஓடி ஒழிந்த நிலையில் பின்னர் பொருட்களை பெரும் நோக்கில் விசேட அதிரடிப்படை போலீசார் கிராம சேவகர் அனைவரும் குறித்த பகுதிக்கு சென்று பிரச்சினைகள் ஆகிய நிலையில் காலித் என்பவர் கொழும்பு சென்ற மாகாண சபை அன்வர் அவர்களோடு தொடர்பை மேற்கொண்டதன் அடிப்படையில் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியோடு பேசியதன் பின்னர் அன்வர் விசேட அதிரடிப்படையை அனுப்பியதோடு குறித்த பகுதிக்கு சென்ற உதவி போலீஸ் அதிகாரிக்கு காலிதின் தொலைபேசியை கொடுக்கும்படி கூறி பின்னர் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தான் அரசாங்க அதிபரோடும் பிரதேச செயலாளரோடும் வருகை தந்து தீர்ப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் திரும்பி சென்றனர்.
பின்னர் காலித் புல்மோடடை போலீஸ் நிலையத்தில் குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக முறைப்பாடு செய்தார் பின்னர் இன்று சனிக்கிழமை காலை 13.08-2016 ம் திகதி காலை 11 மணியளவில் குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான போலீஸ் அத்தியட்சகர் குறித்த பகுதிக்கு சென்று பௌத்த பிக்குவின் பொருட்களை கையளித்ததுடன் காலித் என்பவர் தனது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்ட்டஈடு வழங்கினால் மாத்திரமே முறைப்பாடு வாபஸ் பெறப்படும் என போலீஸ் அத்தியட்சகரிடம் கூறினார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.