’மு.காவினால் மன்னார் எருக்கலம்பிட்டி மைதான புனரமைப்பு ’

பாறுக் ஷிஹான்-

ன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு இவ் வேலைகளை தொடங்கும் முகமாக பாடசாலை மைதானத்தை சூழ உள்ள காடுகளை துப்பரவு செய்யப்படுகின்றன.

இந்த துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தை அப் பாடசாலையின் பழைய மாணவரும் மாகாண சபை உறுப்பினருமான ரயீஸின் ஏற்பாட்டில் கனரக இயந்திரம் மூலம் துப்புரவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றது.

இந்த நடவடிக்கையானது அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எச்எம். ஹரீஸிடம் வட மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான கபீபு முகமது றயீஸ் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் பொது விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கு கணிசமான நிதிகள் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டமாகவே எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -