முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில தினங்களில் இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் அழைப்பின் பேரிலேயே அங்கு செல்வதாக மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற தேசிய அரசின் ஒருவருடபூர்த்தி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கட்சி ஆரம்பித்தால் இரகசியங்கள் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர்.
எவ்வாறெனினும் எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் கலந்து கொள்வதை தவிர்ப்பதற்காகவே இத்தாலிக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.