மகிந்த ராஜபக்ச அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால், இதுவரை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தினரின் திருட்டு, வன்முறை, ஊழல், மோசடிகளை அப்போது தான் வெளியிடப் போவதாகவும் இதனால், அவர்கள் வீதியில் நடந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட போவதாக கூறிய இரகசியங்களில் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு பிரதான இரகசியம் என கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை என எண்ணி செயற்பட்ட மகிந்தவின் மூன்று புதல்வர்களும் பெண் பித்தர்கள் என அனைவரும் அறிந்த விடயம் என பெயரை வெளியிட விரும்பாத ராஜபக்சவினருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியை ஒருவரை நாமல் ராஜபக்ச பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
ராஜபக்ச குடும்பத்தினர் தமது அரசியல் பலத்தை பயன்படுத்தி இந்த முறைப்பாட்டை மூடிமறைத்தனர்.
மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் காரணமாக அவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.
தேவையான நேரத்தில் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உட்பட அன்று அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மூடிமறைக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான ஏனைய குற்றச்சாட்டுக்களை வெளியிட போவதாகவே மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை துரும்பாக பயன்படுத்துகிறாரே தவிர , 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய செயற்படவில்லை என்பது அவரது பேச்சில் உறுதியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அன்று மோசடியாளர்களின் கோப்புகளை மறைத்தது போல, மைத்திரிபால சிறிசேன தற்போது தனது அதிகாரத்தை பாதுகாக்க குற்றவாளிகளை பாதுகாத்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.