இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதியிலிருந்து சுற்றிவளைப்புகள் மெற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
தலைக்கவசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். 517 தர முத்திரை கட்டாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம் பதிவாகியுள்ளதுடன், அதற்கு காரணம் தரமற்ற தவைலக்கவசம் என தெரியவந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -